2036 ஆம் ஆண்டிற்கான ஒலிம்பிக் போட்டியை ஏற்று நடத்த இந்தியா விருப்பம்...!!

2036 ஒலிம்பிக் போட்டிகளை ஏற்று நடத்த இந்தியா விண்ணப்பிக்கவுள்ளது.
இந்த முயற்சி விளையாட்டு வசதிகளை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் சமூக முன்னேற்றத்திற்கும் வழிவகுக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பெருமளவில் முதலீடு செய்வதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் ஒலிம்பிக் போட்டிகள் இதுவரை நடத்தப்பட்டதில்லை.
இந்தியா 1951 மற்றும் 1982 ஆம் ஆண்டுகளில் ஆசிய விளையாட்டுப் போட்டிகளையும், 2010 இல் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தியது.
இந்தியாவைத் தவிர, இந்தோனேசியா, துருக்கி, சில்லி, எகிப்து மற்றும் தென் கொரியாவும் 2036 ஒலிம்பிக் போட்டிகளை நடத்துவதற்கு விண்ணப்பித்துள்ளன.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan