Singapore Breaking News in Tamil

“திரும்ப வந்துட்டேன்னு சொல்லு” என்ற ஸ்டைலில் மூன்றாண்டுகளுக்கு பிறகு சாங்கி விமான நிலையத்தில் பிரமாண்டமாக திறக்கப்படும் McDonald’s…

சிங்கப்பூர் வாழ் மக்கள் அனைவரும் தங்கள் வார இறுதி நாட்களில் குழந்தைகளுடன் ஆர்வத்துடன் வந்து உணவருந்தும் இடங்களில் பிரபலமான McDonald’s ரெஸ்டாரண்டும் ஒன்று.

சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்திலும் இயங்கி வந்த மெக்டொனால்ட்ஸ் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தற்காலிகமாக மூடப்பட்டது. அங்கு விரும்பி உணவு அருந்தும் பல மக்களுக்கும் இது ஏமாற்றமாக இருந்தது.

இந்நிலையில் மூன்று ஆண்டுகள் கழித்து மீண்டும் விமான நிலையத்தின் இரண்டாம் முனையத்தில் தற்பொழுது கோலாகலமாக திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சாங்கி விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வமான facebook பேஜில் மெக்டொனால்ட்ஸ் மீண்டும் திறக்கப்படுவதாக ஜூன் 10ஆம் தேதி அறிவித்தது.

ஏற்கனவே இயங்கப்பட்டு வந்த அதே இடத்தில் மீண்டும் திறக்கப்படுவதாக அறிவித்த நிலையில் ஏராளமான புதுப்புது அம்சங்களை சேர்க்க திட்டமிட்டுள்ளது.ஏற்கனவே இயங்கி வந்த உணவகத்தின் ஸ்டைல்,வடிவமைப்பு போன்றவற்றை மாற்றி புதுவித அனுபவத்துடன் வாடிக்கையாளர்களுக்கு உணவினை வழங்க ரெடி ஆகி வருகின்றது.

இதற்கு முன் இரண்டாவது முனையத்தில் 16 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த மெக்டொனால்ட்ஸ் நிறுவனமானது பராமரிப்பு பணிகளுக்காக மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மீண்டும் திறக்கப்பட உள்ளதால் வாடிக்கையாளர்கள் அனைவரும் தற்போது மகிழ்ச்சியில் உள்ளனர்.