வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

வெயில் காலத்தில் ஏற்படும் நிறமாற்றத்தால் கவலையா??? இதோ உங்களுக்கான டிப்ஸ்..!!

கோடை காலத்தில் சருமம் தொடர்பான பிரச்சனைகளால் பலர் அவதிப்படுகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் சருமத்தில் கருந்திட்டுகள்,கரும்புள்ளிகள், பருக்கள், எண்ணெய் பசை போன்றவை ஏற்படுகின்றன.
எவ்வளவுதான் கெமிக்கல் க்ரீம் உபயோகித்தாலும் சருமத்திற்கு எந்த பலனும் இல்லை.கோடை வெயிலில் இருந்து சருமத்தைப் பாதுகாக்க விரும்புபவர்கள் இந்த அழகுக் குறிப்புகளைப் பின்பற்றலாம்.

தேவையான பொருட்கள்:-

✨️ தயிர் – இரண்டு தேக்கரண்டி

✨️ பீட்ரூட் (சிறியது) – ஒன்று

✨️ கடலை மாவு – இரண்டு டேபிள்ஸ்பூன்

✨️ அரிசி மாவு – ஒரு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

👉 முதலில் பீட்ரூட்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.

👉 அதன் பிறகு, இந்த பீட்ரூட் துண்டுகளை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி அரைத்து சாறு எடுக்கவும்.

👉 அதன் பிறகு, இந்த பீட்ரூட் சாற்றை ஒரு பாத்திரத்தில் வடிகட்ட வேண்டும். பிறகு அதனுடன் ஒரு டீஸ்பூன் அரிசி மாவு சேர்த்து நன்றாக கலக்கவும்.

👉 அடுத்து, இரண்டு ஸ்பூன் கடலை மாவு மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் சேர்த்து,பேஸ்ட் பதத்திற்கு நன்றாக கலக்கவும்.

👉 இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.


👉 இப்படி வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வந்தால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

தேவையான பொருட்கள்:-

✨️ பீட்ரூட் – ஒன்று

✨️ தேன் – இரண்டு தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:


👉 முதலில் பீட்ரூட்டை தோலுரித்து பொடியாக நறுக்கவும்.


👉 அடுத்து இந்த பீட்ரூட் துண்டுகளை மிக்சி ஜாரில் போட்டு விழுதாக அரைக்கவும்

 

👉 பின்னர் இந்த பீட்ரூட் பேஸ்ட்டை ஒரு பாத்திரத்தில் மாற்றவும்.


👉 அதன் பிறகு இரண்டு ஸ்பூன் தேனை அதனுடன் நன்றாக கலந்து முகத்தில் தடவவும்.


👉 இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தினால் சருமத்தின் நிறம் அதிகரிக்கும்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan