பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்…!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!!

பெண்களை பின்தொடர்ந்த மர்ம நபர்...!! போலீசாரின் துப்பாக்கிக்கு இரையானச் சம்பவம்..!!

தென்கொரியாவின் குவாங்ஜூவில் காவல்துறை அதிகாரி மீது தாக்குதல் நடத்திய 55 வயது நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் நேற்று(26.02.2025) தென் கொரிய நேரப்படி அதிகாலை 3 மணியளவில் நடந்துள்ளது.

அடையாளம் தெரியாத ஆண் ஒருவர் இரண்டு பெண்களை பின் தொடர்வதாக போலீசாருக்கு புகார் கிடைத்துள்ளது.

தகவல் கிடைத்ததும் இரண்டு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அதிகாரிகளைப் பார்த்ததும் அந்த நபர் ஆயுதத்தை எடுத்துள்ளார்.

போலீஸ் அதிகாரிகள் பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அந்த நபர் கேட்கவில்லை.

அந்த நபர் ஒரு போலீஸ் அதிகாரியைத் தாக்கினார். இந்தத் தாக்குதலில் அதிகாரி பலத்த காயமடைந்தார்.

இதனை அடுத்து தாக்குதல் நடத்திய நபரை போலீசார் சுட்டுள்ளார்.

இதனால் அந்த நபர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.பின்னர் அவர் இறந்தது உறுதி செய்யப்பட்டது.

காயமடைந்த போலீஸ் அதிகாரிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.