இமயமலை ஏறும் போது தவறி விழுந்ததால் நேர்ந்த சோகம்!!

பிரிட்டிஷ் சுற்றுலாப்பயணி ஒருவர் இமயமலை ஏறிக்கொண்டிருந்தபோது தவறி விழுந்து உயிரிழந்தார்.
இந்த துயரச் சம்பவம் நேரும் போது அவர் அவருடைய நண்பருடன் இருந்தார்.
இரண்டு பிரிட்டிஷ் பயணிகள் கரடுமுரடான பாதையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் கீழே தவறி விழுந்து பலத்த காயம் ஏற்பட்டதாக உள்ளூர் அவசர சேவைப் பிரிவு சொன்னது.
அதன்பின் காயமடைந்த சுற்றுலாப்பயணி மீட்கப்பட்டு மலைக்குகீழ் கொண்டு வரப்பட்டார். ஆனால் மருத்துவமனைக்கு சென்றடைவதற்கு கிட்டத்தட்ட 24 மணி நேரமாகிவிட்டது.
துரதிஷ்டவசமாக அவர் உயிர் பிரிந்தது. அவர் உயிரிழந்து விட்டார் என அறிவிக்கப்பட்டது.
“இந்தியாவில் உயிரிழந்த பிரிட்டிஷ் நபரின் குடும்பத்திற்கு ஆதரவு வழங்கி வருகிறோம். உள்ளூர் அதிகாரிகளோடு தொடர்பில் இருக்கிறோம்” என்று பிரிட்டிஷ் வெளியுறவுத்துறை அலுவலகம் கூறியது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan