Latest Singapore News

சிங்கப்பூரில் பொய்யான தகவலுக்கு எதிரான சட்டத்தின்கீழ் ஓர் ஆன்லைன் செய்தி தளத்திற்கு தடை!

சிங்கப்பூரில் Asia Sentinel இணைய செய்தி தளத்திற்கு சென்ற மாதம் POFMA சட்டத்தின்கீழ் அவர்கள் பதிவிட்ட கருத்துகளைத் திருத்தும்படி உத்தரவிடப்பட்டது.

திருத்தங்கள் பெரும்பாலும் திருத்த அறிவிப்பு எனும் Correction Notice மூலம் தெரிவிக்கப்படும்.

அறிக்கை முதலில் வெளியிடப்பட்ட பதிவுக்கு அருகில் வைக்கப்பட வேண்டும்.

அரசாங்கத்தின் தொடர்புடைய இணையதளத்திற்கு செல்லும் இணைப்பும் அதில் இருக்க வேண்டும்.

முதலில் வெளியிடப்பட்ட பதிவை நீக்க வேண்டிய அவசியம் இல்லை என்று உள்துறை அமைச்சகம் கூறியது.

Asia Sentinel செய்தி தளம் பேச்சு சுதந்திரத்தில் உண்மையாக நம்பிக்கை கொண்டிருந்தால், அதன் வாசகர்கள் முதன் பதிவையும், திருத்தங்களையும் மகிழ்ந்து படித்து உண்மை என்ன என்பதை தாங்களே தீர்மானிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சகம் கூறியது.

பொய்யான தகவல் தடுப்புச் சட்டத்தின்கீழ் Asia Sentinel என்ற ஆன்லைன் செய்தித்தளம் தடைச் செய்யப்பட உள்ளது.

அந்த தளம் திருத்தங்களைச் சரியான பதிவிடத் தவறியதே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.