ஹோட்டல் அறையை திறந்த பெண்ணிற்கு காத்திருந்த அதிர்ச்சி...!!!

கடலோரத்தில் ஹோட்டல் ஒன்றை புக் செய்த பெண்ணிற்கு கதவை திறந்தவுடன் அழகான காட்சிக்கு பதில் அதிர்ச்சியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
அந்தப் பெண் அறையின் கதவைத் திறந்தவுடன் நீர்நாய் ஒன்று தூங்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
நெதர்லாந்தின் விலிசங்கன் பகுதியில் உள்ள ஹோட்டல் உடனடியாக விலங்கு அமைப்பை தொடர்பு கொண்டது.
இச்சம்பவத்தால் பல ஹோட்டல் விருந்தினர்கள் வளாகத்தை விட்டு வெளியேறினர்.
நீர் நாயின் தூக்கமும் கலைந்தது.
எரிச்சல் அடைந்த நீர் நாயை அதிகாரிகள் கவனமாக ஒரு கூடையில் வைத்தனர்.
அந்த நீர் நாய் கடற்கரையில் விடப்படும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
பிறந்தநாளுக்கு ஹோட்டலில் தங்க நினைத்த பெண்ணுக்கும் அறை திரும்ப கிடைத்தது.
நீர் நாயால் தனக்கு மறக்க முடியாத அனுபவம் கிடைத்ததாக அந்தப் பெண் கூறினார்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan