Latest Singapore News in Tamil

திடீரென்று விமானத்தின் அவசரகால கதவை திறந்த நபர்!

விமானம் தரையிறங்குவதற்கு முன்பே Asiana பயணி ஒருவர் விமானத்தின் அவசரகால கதவைத் திறந்ததாக விமான நிறுவனம் தெரிவித்தது.

விமானம் பாதுகாப்பாக தென்கொரியாவில் உள்ள Daegu அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

ஆனாலும்,9 பயணிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் நேற்று முன்தினம் (மே-26) நிகழ்ந்தது.

அந்த உள்ளூர் விமானத்தில் பயணம் செய்த பயணிகள் மொத்தம் 200 பேர்.

கதவு எதிர்பாராமல் திடீரென்று திறக்கப்பட்டதால் பயணிகளில் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

யாருக்கும் உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று Asiana விமான நிறுவனம் கூறியது.

காவல்துறை அந்த கதவைத் திறந்த பயணியை விசாரித்தது.

முதற்கட்ட விசாரணையில் அவர் என்பது தெரிய வந்துள்ளது.

அவர் மனதில் விமானத்தில் இருந்து உடனே வெளியேற வேண்டும் என்ற உணர்வு வந்ததாக கூறினார்.சில தினங்களுக்குமுன் வேலையை இழந்ததால் மனஅழுத்ததிற்கு ஆளாகி இருப்பதாக கூறினார்.

அவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டிருப்பதை காவல்துறை உறுதி செய்தது.

விசாரணை முடிந்த பிறகு,அவரை கைது செய்ய காவல்துறை திட்டமிட்டுள்ளது.