செங்கலால் கொடூரமாக தாக்கப்பட்ட நபர் மருத்துவமனையில் அனுமதி..!!! இருவர் கைது..!!!

சிங்கப்பூர்:கேலாங் பகுதியில் 43 வயதுடைய நபர் ஒருவர் செங்கல்லால் தாக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இச்சம்பவத்தின் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட 21 மற்றும் 22 வயதுடைய இருவர் மீதும் இன்று (பிப்ரவரி 6) நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
நேற்று முன்தினம் (பிப்ரவரி 4) காலை 9 மணிக்கு லோரோங் 21 கேலாங்கிலிருந்து தங்களுக்கு அழைப்பு வந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்தபோது, நபர் ஒருவர் கடுமையான காயங்களுடன் காணப்பட்டார்.
அவரது முகத்தில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
பின்னர் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் மூலம் சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதத்துடன் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது பிரம்படிகள் விதிக்கப்படலாம்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan