சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர் கழக வீடுகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மேற்கொள்ளப்படும் நடவடிக்கை..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் பொருட்கள் குவிந்து கிடக்கும் வீடுகளில் தீ விபத்துகள் குறைந்துள்ளதாக உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் திரு.சண்முகம் தெரிவித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் இதுபோன்ற 23 தீ விபத்துகள் நடந்துள்ளன. மொத்த தீ விபத்துகளின் எண்ணிக்கையுடன் ஒப்பிடுகையில் இது குறைவு.

நாடாளுமன்றத்தில் தீ விபத்து தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர்,ஒவ்வொரு ஆண்டும் கழக வீடுகளில் சுமார் 800 முதல் 900 தீ விபத்துகள் ஏற்படுவதாகக் கூறினார்.

வீடுகளில் பொருட்கள் குவிந்து கிடப்பதை தடுக்க நகர்புற மேம்பாட்டுச் சேவையின் தலைமையில் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

சமீபத்தில் தொடங்கப்பட்ட புதிய சுற்றுச்சூழல் நடவடிக்கைக் குழுவில் அரசு நிறுவனங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் தனியார் அமைப்புகளைச் சேர்ந்த 28 உறுப்பினர்கள் ஆகியோர் உள்ளனர்.இந்தக் குழுக்கள் கழக வீடுகளில் பொதுச் சுகாதார அபாயம் மற்றும் தீ பிடிக்கும் அபாயம் இருக்கும் இடத்தை முன்கூட்டியே கண்டறிய உதவுவதாக திரு.சண்முகம் கூறியுள்ளார்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan