சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

சுயநலமான உலகில் இப்படியும் ஒரு மனிதரா!!

கடந்த ஜனவரி மாதம் 17ஆம் தேதி சீனாவில் உள்ள ஆற்றில் தவறி விழுந்த பெண்ணை காப்பாற்றிய அமெரிக்காவைச் சேர்ந்த ஹோரெஸ் பீச்சாம் என்பவருக்கு சீனா வீர விருது வழங்கி கௌரவித்துள்ளது.

அவர் பூங்கா ஒன்றில் உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது அங்குள்ள ஆற்றில் பெண் ஒருவர் உதவி கேட்டு கத்துவதை அறிந்தார்.

அதன் பிறகு அங்கு சென்று அவர் பார்த்தபோது வயதான மூதாட்டி ஒருவர் நீரில் தத்தளித்துக் கொண்டிருப்பதைக் கண்டார்.

அந்த மூதாட்டிக்கு அடிபடாமல் மிகவும் கவனமாக பிஜாம் மேலே தூக்குவதற்கு முயற்சி செய்தார். அந்த வழியாக சென்றவரும் பீச்சாமுக்கு உதவி செய்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர்.

பீச்சாமின் வீரச்செயலைப் பாராட்டி அதிகாரிகள் அவரது வீடு தேடி சென்று விருதும்,ப பணமும் வழங்கி கௌரவித்து பாராட்டியுள்ளனர்.

பீச்சாமின் செயல் இணையவாசிகளை வெகுவாக கவர்ந்ததாகவும் கூறப்படுகிறது.

”வெளிநாட்டு நண்பருக்கு நன்றி. இரக்கத்திற்கு எல்லைகள் இல்லை” என்று ஒருவரும், ”சீனா உங்களை மிகவும் நேசிக்கிறது” என்று மற்றொருவரும் அவர்களது அன்பை வெளிப்படுத்தியதாக கூறப்படுகிறது.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan