சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!!

சரும பராமரிப்புக்கு வீட்டில் இருக்கும் பொருட்களைப் போடுபவரா? நீங்கள்? அப்போ இப்பதிவு உங்களுக்கானது!!

சருமம் அழகாகவும் கவர்ச்சியாகவும் தெரிய வேண்டுமெனில் சருமத்தை நன்றாக பராமரிப்பதோடு அதன் பிரச்சனைகளை தவிர்க்கவும் தடுக்கவும் என்ன மாதிரியான பொருட்களை பயன்படுத்த வேண்டும் என்பதை காணலாம்.

ஏனெனில் அறியாமல் செய்யும் சில பழக்கவழக்கங்கள் சரும ஆரோக்கியத்தை பாதிப்படையச் செய்யும்.

சிறந்த சரும ஆரோக்கியத்துக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை அறிவது போன்று என்ன பொருள்களை பயன்படுத்தக் கூடாது என்பதையும் அறிந்து கொள்ள வேண்டும்.

ஹைட்ரஜன் பெராக்சைட்:

ஹைட்ரஜன் பெராக்ஸைடு பருக்களை தடுக்கும் கட்டுப்படுத்தும் பொருள் என்று சிலர் அதை பயன்படுத்துவது உண்டு.ஆனால் இது முகத்தில் இருக்கும் பாக்டீரியாக்களை கொல்லும்.

இது சருமத்தில் உள்ள செல்களை சேதப்படுத்துவதோடு,
சருமத்தில் கீறல்கள் வெட்டு காயங்கள் இருக்கும் போது சுத்தம் செய்வதற்கும் இவைகளை பயன்படுத்தக் கூடாது.

அதற்கு மாறாக சோப்பு மற்றும் நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

தாய்ப்பால்:

தாய்ப்பால் குழந்தைகளுக்குரியஊட்டச்சத்து என்பதில் மாற்றமில்லை.ஆனால் சிலர் பருக்களை குறைப்பதற்காகவும் சருமத்தை மென்மையாக்குவதற்காகவும் காய்ச்சாத பால் போல தாய்ப்பாலை பயன்படுத்துகிறார்கள்.

அதற்கு ஏற்ப தாய்ப்பால் கொண்ட ஃபேஸ் மாஸ்க் கிடைக்கிறது. இருப்பினும் தாய்ப்பாலில் இருக்கும் கொழுப்பு கலவையான லாரிக் அமிலம் இருக்கும் பிற கிரீம் வகைகளை பயன்படுத்தலாம்.

தேன்:

முந்தைய காலத்தில் இருந்தே சரும காயங்களுக்கு சிகிச்சை அளிக்க தேன் பயன்படுத்தப்படுகிறது.

பலரும் இதை முகப்பரு போக்குவதற்காகவும் இதை பயன்படுத்துகின்றனர்.

ஆய்வு ஒன்றில் தேன் சோப்பை விட சிறப்பாக செயல்படவில்லை என்று கண்டறிந்துள்ளது. அதே சமயம் நீங்கள் பயன்படுத்தும் தேனுடைய தரத்தைக் குறித்து அறிவது அவசியம் ஆகும்.

மனுகா தேன் சருமத்திற்கு பயன்படுத்தலாம். ஏனெனில் இது ஒரு கிருமி எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது.

எலுமிச்சை சாறு:

எலுமிச்சையில் வைட்டமின் சி இருக்கிறது.எலுமிச்சை சாறு உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு இது சருமத்தை மென்மையாக்கவும் உதவுகிறது.
எலுமிச்சை சாற்றை நேரடியாக முகத்தில் பயன்படுத்தாமல் சாறு எடுத்து மிகச் சிறிய அளவு அல்லது அவை சேர்ந்த கிரீம்களை பயன்படுத்தலாம்.

தேங்காய் எண்ணெய்:

தேங்காய் எண்ணெய் அழகான சருமத்திற்கு ஒரு அமிர்தம் என்றாலும் அதில் லாரிக் அமிலம் நிறைந்துள்ளது. அதேபோல இது பருக்களுக்கு முகப்பருவுக்கு எதிரானது என்பதை நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இது 90 சதவிகிதம் நிறைவுற்ற கொழுப்பு என்பதால் இது சரும துளைகளை அடைக்கும்.எனவே நீங்கள் விரும்பும் அளவுக்கு உங்கள் உடலில் இதைப் பயன்படுத்தலாம்.

ஆனால் தொடர்ச்சியாக அதிக அளவில் இதை பயன்படுத்தும் பொழுது சருமத்தில் கடுமையான வறட்சி அல்லது தோல் அலர்ஜி போன்றவைகளை தூண்டும் வாய்ப்பு ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சி கூறுகிறது.
முடிந்தவரை இதை முகத்தில் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.

சூடான நீர்:

குளிர்காலங்களில் முகத்தைச் சூடாக வைத்திருக்க வெந்நீர் பயன்படுத்த பழக்கம் இருந்தால் இனி அதை தவிர்க்கவும் அதிக சூடு இல்லாமல் அதிக குளிர்ச்சி இல்லாமலும் மிதமான வெப்பநிலை நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இதனால் சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிக எண்ணெய் வெளியேற்றுவதன் மூலம் முகப்பரு மற்றும் வறட்சியை ஏற்படுத்தலாம்.

சரும பராமரிப்பு நன்றாக இருந்தாலும் முகத்திற்கு இளஞ் சூடான நீர் பயன்படுத்தினால் அது சருமத்தை பாதிக்கச் செய்யும்.

Follow us on : click here ⏬

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan