Latest Singapore News

சிங்கப்பூரில் இன்ஸ்பெக்டருக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை!

சிங்கப்பூரில் நிலைய இன்ஸ்பெக்டர் அதிகாரிக்கு ஒன்பது மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.

அவர்மீது மூன்று மானபங்க குற்றச்சாட்டுகளும்,ஒரு பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது.

அவர் இரண்டு பெண் அதிகாரிகளிடம் தவறாக நடந்து கொண்டதற்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

அவர் ஒரு பெண் அதிகாரியை மானபங்கம் செய்வதை மற்ற அதிகாரிகள் பார்த்துள்ளனர்.

மற்ற அதிகாரிகள் அவர்மீது புகார் செய்ததால் விவரம் வெளியே வந்தது.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகளின் பெயரைப் பாதுகாக்கும் விதமாக அந்த 45 வயதுடைய இன்ஸ்பெக்டர் பெயர் வெளியிடப்படவில்லை.

நீதிமன்றத்தில் அவர்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.

மேலும்,ஏழு குற்றச்சாட்டுகள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பாதிக்கப்பட்ட இரண்டு பெண் காவல்துறை அதிகாரிகளில் ஒருவருக்கு வயது 27, மற்றொருவருக்கு வயது 34.

இச்சம்பவங்கள் 2015-ஆம் ஆண்டுக்கும் 2019-ஆம் ஆண்டுக்கும் இடையே நடந்தது.