Tamil Sports News online

சிங்கப்பூரில் புதிய நிலையம்!

சிங்கப்பூரில் உள்ள கேலாங் செராய் வட்டாரத்தில் வசிக்கும் மூத்தோர்களுக்காக புதிய நிலையம் வரவிருக்கிறது.

அவர்களுக்கு தேவையான அனைத்து சுகாதார சேவைகளும் அந்த புதிய நிலையத்தில் கிடைக்கும்.

அது 2025-ஆம் ஆண்டிற்குள் தயாராகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அது Kampung Eunos Network என்று அழைக்கப்படும்.

அதன்மூலம் மூத்தோர்களுக்கு தேவையான திட்டங்களும், சேவைகளும் எளிதாக கிடைக்கும்.

தெம்புசு துடிப்பான மூத்தோர் நிலையம் போன்ற சமூகச் சேவை செய்பவர்களுடன் இணைந்து சேவைகள் வழங்கப்படும்.

இவ்வாறு ஒருங்கிணைந்து செயல்படுவதன்மூலம் குடியிருப்பாளர்களுக்கு திட்டமிட்டுச் சேவையாற்ற முடிவதாக சொல்லப்பட்டது.

கம்போங் யூனோஸ் சேவை நிலையத்தின் தொடக்கநிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் முந்நூற்றுக்கு மேற்பட்ட குடியிருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

மெய்நிகர் தொழில்நுட்பத்தில் குத்துச்சண்டை,முப்பரிமாண சைக்கிளோட்டம் போன்ற விளையாட்டுகளும் மூத்தோர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

உடற்குறையுள்ள குடியிருப்பாளர்கள் வேலை தேடிக்கொள்ள கேக் செய்யும் வகுப்பும் நடத்தப்பட்டது.