latest Singapore news

சிங்கப்பூரில் வேறு நாட்டிலிருந்து முதல்முறை இறக்குமதி!

சிங்கப்பூருக்கு இந்தோனேஷியாவிலிருந்து உயிர்கோழிகள் இறக்குமதி செய்யப்பட்ட உள்ளது. மே,13-ஆம் தேதி அதன் முதல் தொகுதி வந்தடைந்துள்ளது.

நேற்று (மே-14) காலை அவற்றின் விற்பனை தொடங்கியது.

சிங்கப்பூர் மலேசியாவிலிருந்து உயிர்கோழிகளை இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது வேறு நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் முதல் தொகுதி உயிர்கோழிகள் அவை.

இந்தோனேஷியாவிலிருந்து கோழிகளை இறக்குமதி செய்வதற்கான பேச்சு வார்த்தைகளைச் சிங்கப்பூர் உணவு அமைப்பு முடித்துவிட்டபின்,அவற்றை பேரங்காடிகள் விற்க தயாராகி விட்டன.

இந்தோனேஷியா கோழிகளை விற்க ஈரச்சந்தைகளில் உள்ள கோழி விற்பனையாளர்கள் முன்வந்தனர்.

வாடிக்கையாளர்கள் அதனை வரவேற்கின்றனர்.

உணவு விநியோகத்தில் எப்போது வேண்டுமென்றாலும், இடையூறு ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

எனவே, வாடிக்கையாளர்கள் நீக்குப் போக்கான உணவுகளை தேர்ந்தெடுப்பது முக்கியம் என்று தெரிவிக்கப்பட்டது.