Singapore News in Tamil

சிங்கப்பூரில் ஊழியர்களின்…..

சிங்கப்பூர் துணை அமைச்சர் லாரன்ஸ் வோங் தொழிற்சங்க தலைவர்களிடம் பேசினார்.அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைப் பற்றி கேட்டறிந்துக் கொண்டார்.

சிங்கப்பூரில் ஊழியர்களின் நலன் காக்கப்படும் என்று கூறினார்.

அதற்கு நான்காம் தலைமுறை தலைவர்கள் முழு உத்தரவாதம் அளிப்பதாக கூறியுள்ளார்.

அரசாங்கம், முதலாளிகள், தொழிற்சங்கம் ஆகிய மூன்று இணைந்து முத்தரப்பு கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. அந்த முத்தரப்பு கூட்டணியின் இலக்கும் அதுதான் என்றார்.

ஊழியர்களுக்கு நல்ல வேலையை உறுதி செய்வது,அவர்களின் வளர்ச்சி ஆகியவற்றை நோக்கி செயல்படுவதாக குறிப்பிட்டார்.

முத்தரப்பு கூட்டணி அந்த மூன்று தரப்புக்குமே பயன் அளிக்கும் வகையில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

அதுவே, சிங்கப்பூரின் மிகப்பெரிய சாதகமான அம்சம் என்று குறிப்பிட்டார்.

சிங்கப்பூர் பிரதமர் லீ சியென் லூங் தொழிற்சங்க உறுப்பினர்களுடன் ஓய்வு காலத்துக்கு தயாராக இருப்பது போன்ற தலைப்புகளில் கலந்துரையாடினார்.