Latest Singapore News

அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்பட உள்ள தொகை!

அடுத்த மாதம் Edusave கணக்குகள், உயர்நிலைப் பள்ளிக்குப் பிந்திய கணக்குகள் (PSEA) ஆகியவற்றில் 300 வெள்ளி ரொக்கம் நிரப்பப்பட உள்ளது.

சுமார் 540,000 சிங்கப்பூரர்கள் அதைப் பெறவிருக்கின்றனர்.7 வயதுக்கும் 20 வயதுக்கும் இடைப்படவர்கள்.

அந்த தொகை அடுத்த மாதம் ஒரேயொரு முறை வழங்கப்படும்.

அதனைப் பற்றி இவ்வாண்டின் வரவு செலவுத் திட்டத்தில் உத்தரவாத தொகுப்பின்கீழ் அறிவிக்கப்பட்டது.

குழந்தைகளின் கல்வி சார்ந்த செலவுகளில் பெற்றோர்களுக்கு கூடுதல் ஆதரவு அளிக்க கொடுக்கப்படுகிறது.300 வெள்ளி வழங்கப்படுகிறது.

ஆண்டுதோறும் அரசாங்கத்தால் வழங்கப்படும் வருடாந்திர Edusave கணக்கு நிரப்புத்தொகைக்கு மேல் அந்த தொகை கொடுக்கப்பட உள்ளது.