Latest Singapore News

நில போக்குவரத்து தடத்தில் வாகன நெரிசல் ஏற்படலாம்!

சிங்கப்பூரில் இன்று முதல் செவ்வாய்கிழமை வரை நிலச் சோதனை சாவடிகளில் போக்குவரத்து நெரிசல் இருக்க கூடும்.

வரும் வார இறுதியில் மே தினத்தையொட்டி நீண்டநாள் விடுமுறை காரணமாக சொல்லப்படுகிறது.

இதனை சிங்கப்பூர் குடிநுழைவு, சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்தது.

சிங்கப்பூருக்கு நுழையும் வழியிலும் மலேசியாவுக்கு செல்லும் வழியிலும் பயண நேரம் வழக்கத்தை விட அதிகமாக இருக்கலாம்.

சுமார் 3 மணி நேரம் காரில் பயணம் செய்வோர்கள் காத்திருக்க நேரலாம் என்று ஆணையம் கூறியது.

இந்த நிலைமை இன்று முதல் செவ்வாய்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுமார் 1.4 மில்லியன் பயணிகள் புனித வெள்ளி நீண்ட வார இறுதியின்போது சோதனைச் சாவடிகளைக் கடந்தனர்.

அந்த நேரத்தில் வாகனங்கள் நீண்ட வரிசைகளில் சோதனைச் சாவடிகளில் காத்திருக்க நேரிட்டது.

பயணிகள் பயணம் செய்யும்முன் போக்குவரத்து நிலவரத்தைக் கவனிக்கும்படி ஆணையம் வலியுறுத்தியுள்ளது.