Tamil Sports News Online

சிங்கப்பூரில் வீட்டு வாடகை குறைகிறதா?

வரும் மாதங்களில் வீட்டு வாடகை குறையக் கூடும். இதனை நேற்று சிங்கப்பூர் நாணய வாரியம் கூறியது.

அதற்கு காரணம் தற்போது வீடுகளின் விநியோகம் அதிகரித்திருப்பது என்று சொன்னது.

சுமார் 4,00,000 வீடுகள் இவ்வாண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என்றது.

தனியார், பொது வீட்டுத் திட்டங்களின்கீழ் இன்னும் 2 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100,000 வீடுகள் கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியது.

மக்கள் புது வீடுகளுக்கு குடியேறியவுடன் வாடகை வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.

இவ்வாண்டின் முற்பகுதியில் வாடகை வீடுகளை அணுகுவோரின் எண்ணிக்கை குறைந்திருப்பதாக தெரிவித்துள்ளது.

உலக அளவில் பொருளியல் வளர்ச்சி குறைந்து வருவதோடு, நிச்சயமற்ற நிலை ஏற்பட்டு வருவதாலும் வீட்டு வாடகைச் சந்தையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என எதிரிபார்க்கப்படுகிறது.