Singapore news

கியூபா சென்ற சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் கியூபா நான்கு நாட்கள் அதிகாரத்துவ பயணம் மேற்கொண்டிருந்தார்.

நான்கு நாட்கள் அதிகாரத்துவப் பயணம் முடிவடைந்து, நேற்று (ஏப்ரல் 23) சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் நாடு திரும்பினார்.

சிங்கப்பூரும், கியூபாவும் இரு நாடுகளும் உறவை மேலும் வலுப்படுத்தி இருக்கின்றன.

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சர் கியூபா நாட்டிற்கு சென்றவுடன் கியூபா அதிபர் Miguel Diaz-Canel சந்தித்துபோது பல்வேறு அம்சங்கள் பற்றி பேசப்பட்டுள்ளது.

அதோடு இரு தலைவர்களும் ஆகாயச் சேவை,துறைமுகம்,பயணத்துறை, உயிரியல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காகவும் குறித்து பேசப்பட்டது.

சிங்கப்பூர் வளர்ச்சி அனுபவங்களைப் பற்றியும் கியூபா தலைவர்களோடு பகிர்ந்துக் கொண்டார்.