Tamil Sports News Online

சிங்கப்பூரில் ஞாயிற்றுக்கிழமைகளில் சைக்கிளோட்ட புதிய தடம்!

ஞாயிற்றுக்கிழமைகளில் காலை நேரத்தில் சைக்கிள் ஓட்டுவதற்காக நிரந்தர தடம் சிலேத்தார் பகுதியில் ஒதுக்கப்பட உள்ளன.

அதன் முன்னோடி திட்டம் 6 மாதங்களுக்கு மேலாக மேற்கொள்ளப்பட்டது. தற்போது நிரந்தர தடம் கிடைக்க உள்ளது.

அதிகாலை 5 மணி முதல் காலை 11 மணி வரை தடத்தில் பேருந்துகளும் சைக்கிள் ஓட்டிகளும் மட்டுமே பயணம் செய்ய முடியும்.

அனைத்து பயனீட்டாளர்களும் வெஸ்ட் கேம்ப் ரோட்டில் அவரவர் தடங்களில் பயணம் செய்தனர்.

போக்குவரத்து நிலவரம் சுமுகமாக இருந்ததாகவும் கூறியது.

இத்திட்டம் பற்றிய கருத்தாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கலந்துகொண்டு பெரும்பாலானவர்கள் அதனை வரவேற்பதாகவும் கூறுகின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை சைக்கிளோட்ட தடத்தை வேறு எங்கெல்லாம் அமைக்கலாம் என்பதை தற்போது ஆராய்ந்து வருவதாகவும் ஆணையம் தெரிவித்தது.