Latest Singapore News

சிங்கப்பூரில் புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நினைக்கும் நிறுவனங்களுக்கு நிதி ஆதரவு!

நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் முயற்சியில் ஈடுபடுத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் உதவிகள் வழங்கப்படவிருக்கிறது.

இது புதிதாக தொடங்கும் நிறுவனங்களுக்கு பொருந்தும்.

A-I Singapore ஆய்வு நிலையம் தரவுத் திரட்டு,தயாரிப்பு, நிர்வாகம் போன்ற அம்சங்களில் நிறுவனங்களுக்கு பயிற்சி அளிக்கும்.

இதன்மூலம் நிறுவனங்கள் வர்த்தகங்களை உருமாற்றுவதற்கான தீர்வுகளைப் பெறலாம்.

ஆய்வு நிலையம் இதற்கான முயற்சியில்,Temus தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து ஈடுபடும்.

செயற்கை நுண்ணறிவு மூலம் எதிர்பார்க்கும் தீர்வுகள் கிடைக்காதபோது அதற்காக புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க நூறு நிறுவனங்கள் வரை நிதி ஆதரவு பெற முடியும்.

அதோடு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் விரிவான பயிற்சியை 400 க்கும் அதிகமான சிங்கப்பூரர்கள் பெற உள்ளனர்.