சிங்கப்பூர் : சமையலறையில் சமையலை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட சம்பவம்!!

சிங்கப்பூர் : சமையலறையில் சமையலை கவனிக்காமல் விட்டதால் ஏற்பட்ட சம்பவம்!!

சிங்கப்பூரின் பொங்கோலில் உள்ள வீடமைப்பு வளர்ச்சி கழக வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.எட்ஜ்டேல் பிளேன்ஸில் அந்த வீடு அமைந்துள்ளது.

அந்த சம்பவம் அக்டோபர் 18 ஆம் தேதி மாலையில் நடந்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படையின் முதற்கட்ட விசாரணையில், வீட்டில் நடந்து கொண்டிருந்த சமையலை சரியாக கவனிக்காமல் விட்டதால் தீப்பற்றியது தெரிய வந்துள்ளது.

பிளாக் 126D – இல் 14-வது தளத்தில் உள்ள ஒரு வீட்டின் சமையலறையில் பற்றிய தீயை அதிகாரிகள் அணைத்தனர்.

அக்டோபர் 18-ஆம் தேதி மாலை சுமார் 5.10 மணியளவில் அழைப்பு வந்ததாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது.

இந்த தகவல்களை 8World செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.

வீட்டில் இருந்த இருவரும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்து விட்டார்கள்.