சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய நபர்!!

சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுப்பு!! அதிகாரிக்கு கையூட்டு வழங்கிய நபர்!!

சிங்கப்பூருக்குள் நுழைய 30 வயதுடைய  ராக்கிபுல் என்ற நபருக்கு மறுப்பு தெரிவிக்கபட்டது.இதை தொடர்ந்து அந்த நபர் ICA இன் அதிகாரியிடம் கையூட்டு பணத்தைக் கொடுத்ததோடு ஒரு தாள் ஒன்றையும் ராக்கிபுல் கொடுத்தார்.

இச்சம்பவம் சாங்கி விமான நிலையத்தில் நடந்தது.

அக்டோபர் 2-ஆம் தேதி பங்களாதேஷிலிருந்து சிங்கப்பூர் வந்தடைந்தார்.

பின்னர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தில் அவர் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

இதனை அடுத்து சோதனை அறைக்கு அழைத்து செல்லும்போது,“ என்னுடைய பாஸ்போர்ட்டில் 200 வெள்ளி உள்ளது.அதை நான் உனக்கு தருகிறேன்.தயவு செய்து என்னை சிங்கப்பூருக்குள் நுழையவிடு” என்று எழுதப்பட்ட தாளை அதிகாரியிடம் ராக்கிபுல் கொடுத்துள்ளார்.

பிறகு அந்த அதிகாரி மேல் அதிகாரி ஒருவரிடம் இச்சம்பவத்தைப் பற்றி கூறி, விசாரணை செய்ய அழைத்தார்.

ராக்கிபுல் மேல அதிகாரிக்கும் கையூட்டு வழங்க தயாராக இருப்பதாகவும் கூறினார்.

இரண்டு அதிகாரிகளும் ராக்கிபுல்லின் பணத்தை ஏற்க மறுத்து விட்டனர்.

அடுத்த நாள் ராக்கிபுல் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

அதிகாரிகளுக்கு கையூட்டு பணத்தை வழங்கிய நபருக்கு ஒரு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.