சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது இளைஞர் கைது!!

சிங்கப்பூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட 17 வயது இளைஞர் கைது!!

சிங்கப்பூரில் பயங்கரவாதத் தாக்குதலை நடத்த திட்டமிட்ட 17 வயது மாணவனை கடந்த ஆகஸ்ட் மாதம் அதிகாரிகள் கைது செய்தனர்.தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டுள்ளது.

அந்த தாக்குதலை தெம்பனீஸ் குடியிருப்பு பகுதியில் நடத்த திட்டமிட்டிருந்ததை அதிகைர்கள் கண்டுபிடித்துள்ளனர்.முஸ்லீம் அல்லாத ஆண்களைக் கொல்ல திட்டம் தீட்டப்பட்டிருந்தது. அதை செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக அந்த இளைஞர் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாத சித்தாந்தத்தால் மாணவன் ஈர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.ஈராண்டு தடை உத்தரவின்கீழ் தடுத்து வைக்கப்பட்டார்.

அவர் ஐ எஸ் அமைப்பின் தீவிர ஆதரவாளர் என்று கூறப்படுகிறது.

அந்த இளைஞர் சிரியாவுக்கு சென்று ஐ எஸ் அமைப்புக்காக சண்டையிட தயாராக இருந்ததாக உள்துறை,சட்ட அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்தார்.

அங்கு செல்ல சிக்கல்கள் இருந்ததால் தனது திட்டத்தை மாற்றி சிங்கப்பூரிலேயே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக அவர் கூறினார்.

அந்த இளைஞர் தனித்து செயல்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg