ஐபோன் 15 ஐத் தொலைத்த மனைவி..!!! கணவர் செய்த செயல் வைரல்…!!

ஐபோன் 15 ஐத் தொலைத்த மனைவி..!!! கணவர் செய்த செயல் வைரல்...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரைச் சேர்ந்த ஜோசப் பூவா தனது மனைவியின் தொலைந்து போன ஐபோன் 15ஐப் பாதுகாப்பாகத் திருப்பித் தருபவர்களுக்கு 10,000 வெள்ளி பரிசாக வழங்குவதாகத் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 15 அன்று மதியம் 2 மணியளவில், நடந்த சம்பவம் குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஜோசப்பின் மனைவிஆர்ச்சர்ட் மாலில் உள்ள கழிவறையில் தனது மொபைல் போனை மறந்து விட்டுச் சென்றதாகக் கூறியுள்ளார்.

மனைவியின் செல்போன் வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபர் 3 இடங்களுக்குச் சென்றதைக் கண்டுபிடித்ததாகக் கூறினார்.

சந்தேக நபர் சுமாங் லேனில் தங்கியிருக்கலாம் என்றும் ஜோசப் சந்தேகப்படுவதாகத் தெரிவித்தார்.

மேலும் இச்சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

போலீஸ் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.