சாங்கி விமான நிலையத்தில் கைச்சங்கிலியைத் திருடிய பெண்!!

சாங்கி விமான நிலையத்தில் கைச்சங்கிலியைத் திருடிய பெண்!!

கடந்த 2023-ஆம் ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி சாங்கி விமான நிலையத்தின் transit area பகுதியில் இருக்கும் கடையிலிருந்து கைச்சங்கிலியைப் பெண் ஒருவர் திருடியதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து புகார் கிடைத்தவுடன் விசாரணை நடத்தப்பட்டது.

திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதாக கூறப்படும் பெண் நாட்டை விட்டு வெளியேறி விட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி சிங்கப்பூருக்கு திரும்பிய அவர் செய்யப்பட்டார் .இந்த தகவலை 8 world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் நாளை(அக்டோபர் 15) அவர் மீது குற்றம் சாட்டப்படும்.திருடப்பட்ட சங்கிலியின் மொத்த மதிப்பு சுமார் 3000 வெள்ளி என்று 8 world செய்தித்தளம் தெரிவித்துள்ளது.