சிங்கப்பூரில் 51 பேருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்ட சம்பவம்!! காலவரம்பின்றி நடவடிக்கைகளை நிறுத்தியுள்ள நிறுவனம்!!

சிங்கப்பூரில் Stamford Catering Services நிறுவனத்தின் உணவுகளைச் சாப்பிட்ட 51 பேருக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது.இதனை அடுத்து நிறுவனம் அதன் செயல்பாடுகளை காலவரையின்றி நிறுத்தி வைத்துள்ளது.

சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து சிங்கப்பூர் உணவு அமைப்பு மூன்று சம்பவங்கள் குறித்து விசாரித்து வருவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.

நிறுவனத்தின் உணவைச் சாப்பிட்டோருக்கு அக்டோபர் 12-ஆம் தேதி உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களில் சிலர் வெளிநோயாளி சிகிச்சையை அணுகினர்.

மேலும் ஒரு சிலர் சுயமாக மருந்து எடுத்து கொண்டது தெரிய வந்தது.பாதிக்கப்பட்டவர்கள் யாரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை.