56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு…!!!

56 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் மீட்பு...!!!

56 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்தவரின் உடல் தற்போது கண்டெடுக்கப்பட்டது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

1968ல் இந்திய ஆகாயப் படையின் விமானம் இமயமலை பகுதியில் விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் தாமஸ் செரியன் உட்பட 102 பயணிகள் இருந்தனர்.

IAF AN-12 விமானம் 2003ல் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.

அதில் பயணம் செய்த தாமஸ் செரியன் உடல் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

செரியன் மற்றும் அவரோடு பயணித்த மேலும் மூன்று பேரின் உடல்கள் தற்போது டாக்கா பனிப்பாறை அருகே கண்டெடுக்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் இருந்த விமான சிதைவுகளும் அகற்றப்பட்டுள்ளன.

விபத்து நடந்த அடுத்த சில ஆண்டுகளில் இராணுவ தேடுதல் நடவடிக்கைகளின் போது 8 உடல்கள் மீட்கப்பட்டன.

அவரது சகோதரர் தாமஸ் கூறுகையில், செரியனின் உடல் கிடைத்த பின்னரே தன்னால் நிம்மதி பெருமூச்சு விட முடிந்ததாகக் கூறினார்.

செரியன் காணாமல் போனபோது அவரது சகோதரருக்கு வயது 22.

தனது சகோதரனின் உடலை மீட்டு தந்ததற்கு அதிகாரிகளுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
அவரைப் பற்றிய தகவலுக்காக காத்திருந்தே அவரது பெற்றோர் இறந்துவிட்டனர்.