சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!!

சிங்கப்பூரில் வேலையிடத்தில் விபத்து!! 2 மீட்டர் உயரத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர்!!

சிங்கப்பூர் மற்றும் ஜொகூர் பாருவையும் இணைக்கும் RTS Link விரைவு ரயில் சேவையின் கட்டுமானப் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 2 மீட்டர் உயரத்திலிருந்து ஊழியர் ஒருவர் தவறி விழுந்துள்ளார்.

ஊழியர் மீட்கப்பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இந்த தகவலை சிங்கப்பூர் குடிமை தற்காப்புப் படை கூறியது.

அக்டோபர் 10 ஆம் தேதி உட்லண்ட்ஸ் நார்த் கட்டுமானத் தளத்திலிருந்து இரவு சுமார் 9 மணிக்கு தகவல் கிடைத்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சம்பவம் நடந்த போது ஊழியர் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்படும் தூண்களை அகற்றி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

RTS Link கட்டுமான தளத்தில் ஜூன் மாதம் ஓர் விபத்து நேர்ந்தது.இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.இன்னொரு ஊழியர் காயமடைந்தார்.