சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் சோகச் சம்பவம்…!!!

சிங்கப்பூரில் கட்டுமான தளத்தில் உயிரிழந்த வெளிநாட்டு ஊழியரின் சோகச் சம்பவம்...!!!

சிங்கப்பூர்:மெக்நாயர் சாலையில் உள்ள கட்டுமான தளத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பங்களாதேஷ் தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இச்சம்பவம் நேற்று (அக்டோபர் 11) காலை 9.20 மணியளவில் இடம்பெற்றது.

பணிபுரியும் இடத்தில் டிரக் ஒரு ப்ரீகாஸ்ட் கான்கிரீட் வி-சேனல் வடிகால் ஸ்லாப்பைக் கொண்டு சென்றபோது அந்த நபரை மோதியதாக மனிதவள அமைச்சகம் தெரிவித்தது.

இதில் 38 வயதுடைய பங்களாதேஷ் தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

கட்டுமானப் பகுதியில் வீட்டு வசதி மேம்பாட்டுக் கழகத்தின் தேவைக்கேற்ப வீடுகள் கட்டப்படுகின்றன.

சம்பவத்தை அடுத்து கால்வாய்கள் அமைக்கும் பணியை நிறுத்த கே லிம் கன்ஸ்ட்ரக்ஷன் அண்ட் டிரேடிங் நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக போலீஸ் விசாரணை நடைபெற்று வருகிறது.