பிறந்தநாள் கேக்கில் இருந்த மெழுகுவர்த்தி செய்த சம்பவம்…!!

தாய்லாந்து உணவகம் ஒன்றில் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருக்கு ஆச்சரியப்படுத்தும் வகையில் பிறந்தநாள் கேக்கைக் கொண்டுவந்தார்.

மேசையின் மீது வைப்பதற்காகத் தட்டை ஓரமாக நகர்த்த முயன்றார்.அப்போது எதிர்பாராதவிதமாக கேக்கின் மேல் எரிந்து கொண்டிருந்த மெழுகுவர்த்தியில் அவரது தலைமுடி பட்டது.இருவரும் அதை கவனிக்கவில்லை.

நெருப்பு அந்த பெண்ணின் முகத்தை நெருங்கியதும் தான் இருவரும் அதை உணர்ந்தனர். அந்த நேரத்திலும் அந்த பெண் பதட்டப்படாமல் அமைதியாக தன் கைகளால் தீயை அணைத்தார்.

இந்த சம்பவத்தின் 10 வினாடி வீடியோ டிக்டாக்கில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை மில்லியன் கணக்கான ரசிகர்கள் பார்வையிட்டுள்ளனர்.

இக்கட்டான சூழ்நிலையில் துரிதமாக செயல்பட்ட அந்தப் பெண்ணின் செயலை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.