மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது…!!

மனைவியை இரண்டு வருடமாக கொலை செய்ய திட்டமிட்ட கணவர் கைது...!!

ஆஸ்திரேலியாவில் விஷம் கலந்த தேநீரைக் கொடுத்து தனது மனைவியைக் கொல்ல சதி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டீஃபன் வாக்னர் என்ற நபர் தயாரித்த தேநீரை அருந்தியதால் அவரது 66 வயது மனைவி கடும் நோய்வாய்ப்பட்டதாக கூறப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக 61 வயதான வாக்னரை போலீசார் சிட்னியில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.

வீட்டில் கண்டுபிடிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

மனைவியை கொலை செய்யும் நோக்கில் விஷம் கொடுத்தது மற்றும் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் உள்ள மருந்துகளை பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.

நீதிமன்றத்தில் கைதான அவர் ஜாமீன் எதுவும் கோரவில்லை.

வாக்னர் தனது மனைவிக்கு டிசம்பர் 2022 முதல் இந்த ஆண்டு 2024 செப்டம்பர் வரை எறும்புகளைக் கொல்லும் பூச்சிக்கொல்லி மருந்தை வழங்கியதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன.

அவர் டிசம்பர் மாதம் மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.