சிங்கப்பூர் : ஓர் வீட்டில் தீ விபத்து!! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி!!

கிளமெண்டி அவென்யூ 8 இல் பிளாக் 339 இல் அக்டோபர் 8-ஆம் தேதி(இன்று) தீ விபத்து ஏற்பட்டது.வீட்டில் இருந்த நபர் ஒருவர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இந்த தகவலை 8World செய்தித்தளம் வெளியிட்டது.

ஜூரோங் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் டான் வு மெங் இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

தீ விபத்து ஏற்பட்ட இடத்திற்கு டாக்டர் டான் சென்றதாக குறிப்பிட்டார்.அருகில் இருந்த அண்டை வீட்டுக்காரர்களை நேரில் சந்தித்ததாக கூறினார்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட நபர் தீயால் ஏற்பட்ட புகையை சுவாசித்ததால் கொண்டு செல்லப்பட்டதாக கூறினார்.

தீ விபத்துக்கான காரணத்தை கண்டறிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் டாக்டர் டான் கூறினார்.