மரண பீதியில் கிராமவாசிகள்…!!!ஓநாயை அடித்தே கொன்ற ஊர் மக்கள்…!!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள கிராமம் ஒன்றில் மக்களை அச்சுறுத்தி வந்த ஓநாய் ஒன்று அடித்துக் கொல்லப்பட்டுள்ளது.

ஓநாய் கூட்டத்தைச் சேர்ந்த ஆறு ஓநாய்கள் கிராமத்து மக்களை அச்சுறுத்தி வந்தது. ஓநாய் கூட்டம் கிராமத்தில் கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்டவர்களை தாக்கியுள்ளது.

இச்சம்பவத்தில் 9 பேர் உயிரிழந்தனர்.ஓநாய்களை பிடிக்க கடந்த மாதம் வனவிலங்கு அதிகாரிகள் உட்பட 150க்கும் மேற்பட்டோர் அங்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதன் விளைவாக 5 ஓநாய்கள் பிடிபட்டன.அதில் ஒன்று மட்டும் அகப்படாமல் இருந்தது.

இந்நிலையில், எஞ்சியிருந்த ஓநாயை கிராம மக்கள் ஒன்றுச் சேர்ந்து கொன்று விட்டனர்.இந்தத் தகவலை மாநில வனவிலங்கு அதிகாரிக்கு தகவல் தெரிவித்தனர்.

கிராமப் பகுதியில் ஓநாய்கள் நடமாட்டம் இல்லாத வகையில் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.

Follow us on : click here ⬇️

Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0

Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram : https://t.me/tamilansg