அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!!

அதிகரிக்கும் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு!!

மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு அதிகரித்து வருகிறது. இது அரசாங்கத்தின் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையை காட்டுகிறது என்று மலேசியா பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் CNBC தொலைக்காட்சிக்கு அவர் பேட்டியளித்தார்.

அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய நாணயம் நான்கு ரிங்கிட் பத்து காசை எட்டியுள்ளது.

இது இன்னும் குறைவாகவே உள்ளது என்று திரு. அன்வர் கூறினார்.

முன்பு மூன்று ரிங்கிட் எண்பது காசுகள் என்பதை மக்கள் மறக்கவில்லை என்று அவர் கூறினார்.

அரசின் தலையீடு இல்லாமல் சந்தைக்கு ஏற்ப படிப்படியாக ரிங்கிட் உயர்வது நல்லது என்றும் அவர் கூறினார்.