தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!!

தைவானில் கிராதோன் புயலின் தாக்கம்!! தொடரும் மீட்பு பணிகள்!!

தைவானில் கிராத்தோன் சூறாவளியில் சிக்கி காணாமல் போன இருவரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து சூறாவளியால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை நான்காக உயர்ந்துள்ளது.

மேலும் சூறாவளியால் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

கிட்டத்தட்ட 20,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.

சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக சில மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

சாலைகளை சுத்தப்படுத்தவும், சாலைகளில் இருந்து நீரை வெளியேற்றவும் சுமார் 250 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக தற்காப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இரண்டாவது நாளாக பிங்டாங் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 1500 ராணுவ வீரர்கள் சூறாவளி மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.