தைவானைத் தாக்கிய சூறாவளி!! மருத்துவமனையில் தீ!! 9 பேர் பலி!!

தைவானில் இன்று கிராத்தோன் சூறாவளி கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்து.

இது பிற்பகலில் பலத்த காற்று மற்றும் அடை மழையுடன் கரையைக் கடந்தது.

இதனால் சில பகுதிகள் ஸ்தம்பிக்கச் செய்தது.இந்நிலையில் தெற்கு தைவானில் உள்ள ஒரு மருத்துவமனையில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

அவர்கள் தீயால் ஏற்பட்ட புகையைச் சுவாசித்ததால் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கிராத்தோன் புயலால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள Pingtun பகுதியில் இச்சம்பவம் ஏற்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு தீயணைப்பு வீரர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு உதவ அனுப்பப்பட்டனர்.

மேலும் அங்கிருந்த நோயாளிகள் பாதுகாப்பாக வெளியேற தீயணைப்பு வீரர்கள் உதவி செய்தனர்.

கொட்டும் மழையாலும், பலத்த காற்றாலும் ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள கூடாரங்களுக்கு மாற்றப்பட்டனர்.