வெளிநாட்டு ஊழியரைத் தாக்கிய சிங்கப்பூரர்!

சிங்கப்பூரில் மெக்பர்சன் வட்டாரத்தில் வேலைச் செய்துகொண்டு இருந்த 20 வயதுடைய துப்புரவாளரைத் தாக்கியதாக கூறப்படும் 62 வயதுடையவர் இதற்குமுன்பும் வெளிநாட்டு ஊழியர்களுக்கு தொல்லைக் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

இதனை மெக்பர்சன் தனித் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார்.

வெளிநாட்டு ஊழியர் பங்களாதேஷை சேர்ந்தவர். இவருடைய பெயர் அகமது ஷியாமை.

62 வயதுடைய நபர் அவரை தாக்கியதாக கூறப்படும் இச்சம்பவத்தை காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக TODAY செய்தித்தளத்திடம் காவல்துறை கூறியது.

பொது சேவை ஊழியர்கள் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர்களுக்கு தொல்லை கொடுத்து,வேலை செய்யவிடாமல் தொந்தரவு செய்பவர்களுக்கு 12 மாதச் சிறை,5,000 ஆயிரம் வெள்ளி அபராதம் அல்லது இவ்விரண்டுமே விதிக்கப்படலாம்.