புயலின் எதிரொலி!! தைவானை நெருங்கும் கிராத்தோன்!!

Krathon புயல் தைவானை நெருங்குகிறது. புயலானது வலுவிழந்து நாளை (வியாழக்கிழமை) அதிகாலை தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புயல் முதலில் எதிர்பார்த்த அளவிற்கு கடுமையாக இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.உள்ளூர் விமானச் சேவைகள் மற்றும் படகுச் சேவைகளை ரத்து செய்துள்ளது.

மேலும் பாதிக்கப்படையக்கூடிய பகுதிகளில் இருந்து சுமார் 10,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

புயல் கரையைக் கடக்கும் முன் அதன் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் பருவமழை மற்றும் பலத்த காற்று வீசும்.

இந்த புயலின் தீவிர வானிலை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.