இந்தியா : வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்!! பலியான மூவர்!!

மேற்கு இந்தியாவில் புனே நகரின் மலைப்பகுதியில் தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை இந்தியா நேரப்படி 6.45 மணியளவில் வெடித்து சிதறி விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக AFP செய்தி தெரிவித்துள்ளது.உயிரிழந்தவர்கள் இரு விமானிகள் மற்றும் ஒரு பொறியாளர் என்பதை தீயணைப்பு மீட்புத்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தில் ஹெலிகாப்டரின் உதிரி பாகங்கள் சிதறி கிடந்ததாக கூறினர்.

விபத்துக்கான காரணம் தெரியவில்லை.பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து நேர்ந்திருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

உயிரிழந்தவர்களின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

தனியார் ஹெலிகாப்டரை எதிர்க்கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் கட்சி வாடகை எடுத்திருந்தனர்.

மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது அது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் உடல்கள் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.தனியார் ஹெலிகாப்டரை எதிர்க்கட்சியான தேசியவாதக் காங்கிரஸ் கட்சி வாடகை எடுத்திருந்தனர்.

மும்பைக்கு சென்று கொண்டிருந்த போது அது விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது.