சிங்கப்பூருக்கு வருகை தரும் நடிகர் சிவகார்த்திகேயன்…!!!

சிங்கப்பூருக்கு வருகை தரும் நடிகர் சிவகார்த்திகேயன்...!!!

சிங்கப்பூர்: தென்னிந்திய பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் ‘அமரன்’ படத்தின் புரோமோசனுக்காக சிங்கப்பூர் வந்துள்ளனர்.

சிங்கப்பூரில் பணிபுரியும் வெளிநாட்டு ஊழியர்களை சந்திக்க சிறப்பு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து வெளிநாட்டு பணியாளர் நிலையம் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் நிலையத்தின் பொழுதுபோக்கு மண்டபத்தில் இன்று மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இதற்கு அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியை TikTok பிளாட்ஃபார்மிலும் நேரடியாக பார்க்கலாம்.

‘அமரன்’ திரைப்படம் அடுத்த மாதம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகிறது.

இது அமரன் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில்,சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியாவுடன் இணைந்து ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்த, ஒரு அதிரடியான போர்த் திரைப்படம் ஆகும்.

இப்படத்தில் மேஜர் முகுந்த் வரதராஜன் வேடத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.

இவர்களுடன் சாய் பல்லவி, புவன் அரோரா, ராகுல் போஸ், லல்லு, ஸ்ரீகுமார், ஷியாம் மோகன், அஜே நாக ராமன், மீர் சல்மான் மற்றும் கௌரவ் வெங்கடேஷ் ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர்.

இது முகுந்த் வரதராஜனை அடிப்படையாகக் கொண்டு ஷிவ் அரூர் மற்றும் ராகுல் சிங் எழுதிய இந்தியாவின் மிக அச்சமற்ற ஒரு நவீன இராணுவத்தின் உண்மைக் கதைகள் என்ற புத்தகத் தொடரின் தழுவலாகும்.

இந்தப் படத்தை உலகம் முழுவதும் தீபாவளி அன்று வெளியாக உள்ளதை அடுத்து இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow us on : click here ⬇️