யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!!

யானை தாக்கியதால் ஏற்பட்ட உயிரிழப்பு!!

மலேசியா: துப்புரவாளர் ஸாலினி டாலான்(51) யானை தாக்கியதில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளன.

மேலும் 31 வயது உடைய சியாஃபிக் யாகோப் யானை தாக்கியதில் உயிரிழந்தார். இந்த சம்பவம் கெபாங்சான் தெங்காரரொ பள்ளியின் பின்புறம் நடந்தது.

இவர் ஜொகூர் பாருவில் உள்ள சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு இடுப்பு எலும்பு மற்றும் விலா எலும்பும் முறிந்ததாகவும் மேலும் தலையில் ரத்த கசிவு ஆகியவை ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

யானை பள்ளியை நோக்கி வந்ததால் அதை விரட்ட திரு ஷாலினியும் அவருடன் வேலை செய்த சக ஊழியர்களும் முயற்சி செய்தனர். அப்போது இருவரும் தாக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது.

 

Follow us on : click here ⬇️