மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறை…!!!

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண்ணுக்குச் சிறை...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்பட காரணமாக இருந்த பெண்ணுக்கு 3 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

61 வயதான கோ சியு ஹுவா சீனப் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மது அருந்தினார்.

மது போதையில் இருந்த அந்தப் பெண்மணி வாகனத்தை ஓட்டியுள்ளார்.

அவர் புக்கிட் பஞ்சாங் பகுதியில் வலது பக்கம் திரும்பிக் கொண்டிருந்த போது எதிரே வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதினார்.

இதனால் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மற்றும் உடன் பயணித்த பெண் பயணி இருவருக்கும் பலத்த காயம் மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டது.

விபத்து நடந்த இடத்திற்கு போலீசார் சென்று பார்த்தபோது,அவரும் அவருடைய வாகனமும் சம்பந்தப்பட்ட இடத்தில் இல்லை.

கணவருடன் ஆலோசனை செய்து அரை மணி நேரம் கழித்து கோ விபத்து நடந்த இடத்தை அடைந்தார்.

மதுபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதற்காக அவருக்கு 5,000 வெள்ளி அபராதம் மற்றும் 7 ஆண்டுகள் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டது.