பரதக் கலைஞர் திருமதி.வசந்தா காசிநாத் காலமானார்…!!!

பரதக் கலைஞர் திருமதி.வசந்தா காசிநாத் காலமானார்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் முன்னோடி பரத கலைஞரும் ஆசிரியையுமான திருமதி வசந்தா காசிநாத் தனது 79 வயதில் காலமானார்.இவர் பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

அவர் வசந்த காசிநாத் கலாஸ்தானியம் என்ற பரத கலைப் பள்ளியை நடத்தினார்.

50 ஆண்டுகளாக 3000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பரதம் கற்பித்து தந்த பெருமை இவரைச் சேரும்.

1963ல் சிங்கப்பூரில் தொலைக்காட்சி அறிமுகமானபோது, தொடக்க நிகழ்ச்சியில் நடனமாடினார்.

தன் வாழ்நாள் முழுவதும் பரத கலையை இளைஞர்களிடம் கொண்டு சேர்க்க பாடுபட்ட முன்னோடி கலைஞர்களில் ஒருவராக திருமதி. வசந்தா காசிநாத் பார்க்கப்படுகிறார்.

அவரது நல்லுடல் இன்று மதியம் 12 மணி முதல் நாளை (செப்டம்பர் 26) மாலை 3.15 மணி வரை Mt Vernon சரணாலயம் 1 இல் வைக்கப்படும்.

இறுதிச் சடங்கானது நாளை (செப்டம்பர் 26) மாலை 4.15 மணியளவில் மாண்டாய் மயானத்தில் வைத்து நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.