யீஷூன் புளோக் 717 இல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்…!!!

யீஷூன் புளோக் 717 இல் ஏற்பட்ட தீ விபத்து சம்பவம்...!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் யீஷூன் ஸ்ட்ரீட் 71,புளோக் 717 இல் தீ விபத்துச் சம்பவம் நடந்துள்ளது.

அங்குள்ள காபி கடையில் தீ விபத்து ஏற்பட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்துள்ளது.

நேற்று (செப்டம்பர் 18) இரவு 7.10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.

இதனால் புளோக் 717ல் வசிப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதனால் படிக்கட்டு வழியாக குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்பட்டு தொகுதிக்கு கீழே மக்கள் கூட்டமாக காட்சியளித்தனர்.

தீ விபத்துச் சம்பவம் தொடர்பான கூடுதல் விவரங்கள் விரைவில் வழங்கப்படும் என குடிமை தற்காப்புப் படை தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

நீ சூன் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசல் இப்ராகிம் சம்பவ இடத்திற்கு சென்று மக்களை சந்தித்தார்.

தீ விபத்து குறித்த காரணம் தெரியவில்லை.

இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், குடியிருப்பாளர்களின் பாதுகாப்பே முக்கியம் என்று செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்தார்.

Follow us on : click here ⬇️