புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது விசாரணை…!!!

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளி மாணவரை தாக்கிய சக மாணவர்கள் மீது விசாரணை...!!!

சிங்கப்பூர்: புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர் ஒருவரை துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஒரு மாணவர் மற்றொரு மாணவரின் முதுகில் உதைக்கும் வீடியோ டிக்டாக்கில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

வீடியோவில், துன்புறுத்தப்பட்ட மாணவர் வலியால் துடிப்பதையும் மற்ற மாணவர்கள் அவரை கேலி செய்வதையும் காணலாம்.

அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலர் கண்டித்ததை அடுத்து அந்த வீடியோ தற்போது நீக்கப்பட்டுள்ளது.

ஹவுசிங் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் ஹாலில் இந்தச் சம்பவம் நடந்த போல் தெரிகிறது.

புக்கிட் வியூ உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த குறைந்தது 5 மாணவர்களாவது இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இந்த சம்பவம் கடந்த ஆண்டு (2023) அக்டோபரில் நடந்ததாகவும், அப்போது பள்ளிக்கு இது குறித்து தெரிவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்தப் பிரச்சனை தொடர்பாக பள்ளியின் முதல்வர் ஜஸ்வந்த் சிங் இதுபோன்ற தவறான நடத்தைகளை பள்ளி பொறுத்துக்கொள்ளாது அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.

சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட மாணவரின் பெற்றோர் காவல்துறையில் புகார் அளித்துள்ளதாகவும் திரு.சிங் கூறினார்.

 

Follow us on : click here ⬇️