11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்பு!

இந்தியாவில் உள்ள ஆந்திர பிரதேச மாநிலத்தில் 11 ஆண்டுகளாக கணவர், மாமியாரால் வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்ட பெண் மீட்கப்பட்டுள்ளார்.

அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த சாய் சுப்பிரியா 2008-ஆம் ஆண்டு கோதாவரி மதுசூதனனைத் திருமணம் செய்து கொண்டார்.

சாய் சுப்பிரியா கணவர் வீட்டில் சித்தரவதையை அனுபவிக்கிறாள் என்று தெரிந்தும் அவருடைய பெற்றோர் பல காலங்களாக அமைதியாக இருந்துள்ளனர்.

எனினும் அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.

இதனால், அவர்கள் நீதிமன்றத்தின் உதவியை நாடினர். தங்கள் மீட்டுத் தர வேண்டி வழக்கு தொடுத்ததாக இந்தியா ஊடகங்கள் கூறின.

தற்போது, இதன் பலனாக 35 வயதுடைய சாய் சுப்பிரியா மீட்கப்பட்டார். சுப்பிரியா மிக மோசமான உடல்நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.

அவருக்கு 3 பிள்ளைகள் இருப்பதாக காவல்துறை தெரிவித்தது.

அவருடைய கணவர், மாமியார் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.