நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும்,வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவுற்றது!

2025-ஆம் ஆண்டில் சாங்கி விமானத்தின் ஐந்தாம் முனையத்தின் கட்டுமான பணிகள் தொடங்கும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்தார்.

அதன் பின் 2035-ஆம் ஆண்டில் ஐந்தாம் முனையம் செயல்பட ஆரம்பிக்கும் என்றும் கூறினார்.

சாங்கி விமான நிலைய மேம்பாட்டிற்காக அரசாங்க நிதி ஒதுக்கி இருந்தது. அதற்காக கூடுதலாக மேலும் 2 பில்லியன் வெள்ளியை ஒதுக்கவிருக்கிறது.

நிலத்தைச் சீரமைக்கும் பணிகளும், வடிகால் அமைப்புகளும் சாங்கி ஈஸ்ட் பகுதியில் நிறைவடைந்து விட்டதாக குறிப்பிட்டார்.

2030-ஆம் ஆண்டிற்குள் அதன் மூன்றாவது ஓடுபாதை தயாராகி விடும் என்றும் கூறினார். கடந்த இரண்டு ஆண்டுகளாக நோய் பரவல் காரணமாக இந்த பணிகள் நிலுவையில் இருந்தன.