ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 33 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிப்பு…!!!

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரையில் 33 வயதான ஆணின் சடலம் கண்டுபிடிப்பு...!!!

சிங்கப்பூர்: ஈஸ்ட் கோஸ்ட் பூங்காவின் கடற்கரையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இறந்தவருக்கு 33 வயது இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடந்த வாரம் (செப்டம்பர் 7) காலை 7.50 மணியளவில் போலீசில் புகார் செய்யப்பட்டது.

ஈஸ்ட் கோஸ்ட் கடற்கரை F3 கார் பார்க்கிங்கிற்கு அருகிலுள்ள கடற்கரையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

மூன்றுக்கும் மேற்பட்ட போலீஸ் கார்கள் மற்றும் குற்றப் புலனாய்வு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்தன.

சம்பவ இடத்திற்கு விரைந்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, அவரது மரணத்தை உறுதி செய்தது.

முதற்கட்ட விசாரணையில் அவர் கொலை செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.